ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகல்


ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகியுள்ளார். குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் விலகினார். கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், அஷ்வினுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது

The post ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: