உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி

தூத்துக்குடி,பிப்.17: தூத்துக்குடியில் தொழில்முனைவோர் பயிற்சி மையம் சார்பில் உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி விக்டரி தொழில்முனைவோர் பயிற்சி மையம் சார்பில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கத்தில் வைத்து தொழில்முனைவோருக்கான 3 நாள் உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி நடைபெறுகிறது. நேற்று பயிற்சி தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில், ஜுஸ், ஊறுகாய், மசாலாப்பொடி, ஜிகர்தண்டா, செம்பருத்தி ஜுஸ் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்களாக கார்த்திக்கேயன், டார்வின், அப்துல் மஜீத் ஆகியோர் செயல்படுகின்றனர். இதில் ஏராளமான தொழில்முனைவோர், பெண்கள் பங்கேற்றனர்.

The post உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: