அதற்குள் ரயில் திருமங்கலம் ஸ்டேஷனை கடந்து சென்றது. உடனடியாக, இதுகுறித்து கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளிக்குடியில் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் வாலிபர் உடலை மீட்டனர். சுமார் 15 கிமீ தூரம் நின்ற நிலையில் உடலுடன் ரயில் வந்துள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்தவர் திருமங்கலம், ஆறுமுகம் நகர் வடபகுதியைச் சேர்ந்த முருகன் (36) என தெரிந்தது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதனால் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
The post திருமங்கலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை வாலிபர் உடல் 15 கி.மீ இன்ஜினில் இழுத்துச் செல்லப்பட்ட பயங்கரம்: நின்ற நிலையிலேயே சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.