மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருவேங்கடம்  கலைவாணி பள்ளி சாதனை

திருவேங்கடம், பிப்.16: தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான எறிபந்து போட்டி புதுக்கோட்டையில் உள்ள எம்ஆர்எம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வைத்து நடந்தது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம்  கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும் கோவையில் உள்ள ஆதித்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில்  கலைவாணி பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

The post மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருவேங்கடம்  கலைவாணி பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: