இதன் தொடர்ச்சியாக, புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருமென்று 2023 மார்ச் 30ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று அவற்றை ஆய்வுசெய்து பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.