திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை புலியூர் கிராமத்தை சேர்ந்த இளம் பட்டதாரி ஸ்ரீ
இந்நிலையில், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவ்வாதுமலை பகுதி அரசவெளி மலை கிராமத்தில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்வழி கல்வி படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் பயன் என பெருமிதத்துடன் தமது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ஜவ்வாதுமலையை சேர்ந்த ஸ்ரீபதியின் இந்த வெற்றியால், நாங்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது.
குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுத சென்றதும், அதில் தேர்ச்சி பெற்றதும் மிகப்பெரிய வெற்றியாகும். ஜவ்வாதுமலையின் அடையாளமாக பதி மாறியிருக்கிறார். ஜவ்வாதுமலை மீது இருந்த எதிர்மறையான பிம்பத்தை ஸ்ரீபதி மாற்றியிருக்கிறார். அவரை முன்னுதாரணமாக கொண்டு ஜவ்வாதுமலையில் உள்ள பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். தங்களுடைய திறமை என்ன என்று அறிந்து, சமூகத்துக்கு தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும். ஜவ்வாதுமலையை சேர்ந்த ஸ்ரீபதி நீதியரசியாக உயர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும் வாழ்வியலையும் தமது தீர்ப்பின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதற்காக, எங்களுடைய அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறோம். குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
The post முதல் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி வெற்றிக்கு தமிழ்வழி கல்விக்கு முதல்வர் தந்த 20% இடஒதுக்கீடுதான் காரணம்: பள்ளி ஆசிரியை நெகிழ்ச்சி appeared first on Dinakaran.