அப்போது மோஜிக் என்ற காளான் அதிக போதையுடன் பாலுணர்வை தூண்டும் என்பதை அறிந்தனர். அதன்படி அருகில் உள்ள பைன் பாராஸ்ட் பகுதிக்கு சென்று போதை காளானை கண்டுபிடித்து வீட்டுக்கு பறித்து வந்தனர். அதனை சமைத்து மதுவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்னர் தூக்கத்திலோ அல்லது மயக்கத்திலேயே உயிர் போயிருப்பது தெரியவந்துள்ளது. முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து ஆகாஷை கைது செய்தனர்.
The post மதுவுடன் சேர்த்து போதை காளான் தின்ற மாணவி பலி கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்திய வழக்கில் காதலன் கைது appeared first on Dinakaran.