சென்னை: அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தன்னிடம்
அதில், மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான மதிமாறன்(61) என்பவர், தன்னிடம் வீடு மற்றும் நிலம் வாங்க வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அழகான இளம்பெண்களை அனுப்பி அதன் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இதற்காக அழகான இளம்பெண்களை மாத ஊதியத்தில் பணி நியமனம் செய்து, தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு என தனித் தனியாக ஐடெக் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் அதிரடியாக நேற்று ரியல் எஸ்டேட் அதிபர் மதிமாறனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போன்கள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மதிமாறனை போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
The post வீடு, நிலம் வாங்க வருபவர்களை கவரும் வகையில் பாலியல் தொழில் நடத்திய ரியல் எஸ்டேட் அதிபர் ைகது: 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.