திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சந்தீப்பிற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே ஜாமின் கோரி சந்தீப் தாக்கல் செய்த மனுவை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கில் இருந்து சந்தீப் இனி தப்பிக்க முடியாது என கூறப்படுகிறது. முன்னதாக வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வந்தனா தாஸின் தந்தை தாக்கல் செய்த மனுவையும் கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
The post கொலையாளி மனநலம் பாதிக்கப்படவில்லை’: மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் மனநல பரிசோதனை அறிக்கை வெளியீடு!! appeared first on Dinakaran.