இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து மிரட்டல் இ-மெயில் வந்தது. இதுகுறித்து பாந்த்ரா குர்லா போலீசார், ஐபிசி 505 (1) (பி) மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். rkgtrading777@gamil.com என்ற முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய குடிமகன் என்றும், அனைத்து அமெரிக்க தூதரகங்களையும் தகர்த்து விடுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
The post மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை appeared first on Dinakaran.