மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

 

அரூர், பிப்.11: கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் 2 பள்ளியில் பயிலும் 284 மாணவ, மாணவிகளுக்கு, திமுக மொரப்பூர் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி செங்கண்ணன் கலந்து கொண்டு சைக்கிள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், முல்லைகோபால், தலைமை ஆசிரியர்கள் பழனிசாமி, முத்துவேடி, தீபாமுருகன், ஜெயகுமார், லோகேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Related Stories: