ஆனால், சமாதான அரசியலாலும், சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டியும் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) குறித்து முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தூண்டப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. சிஏஏ சட்டம் கொண்டு வர நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆட்சியிலேயே கையெழுத்திடப்பட்டது. ஆனால் சமாதான அரசியல் காரணமாக காங்கிரஸ் அதை புறக்கணித்தது. 2019ல் இயற்றப்பட்ட இந்த சட்டம் தொடர்பான விதிகள் வெளியிடப்பட்ட பிறகு வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுவது நிச்சயம். உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட அமலாக்கம் சிறந்த சமூக மாற்றம். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் குறியீடுகள் இருக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
The post யாருடைய குடியுரிமையும் பறிபோகாது மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்: அமித்ஷா திட்டவட்டம் appeared first on Dinakaran.