பொதுக்குழு கூட்டத்தில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசச்செய்து, கட்சிக்கு களங்கம் உருவாக்கினார். எப்பொழுது ஜெயலலிதா இறப்பார் என எடப்பாடி காத்திருந்தார். அதன்பிறகு தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். அவரை முதலமைச்சராக அறிவித்த பாவத்தையும் நான்தான் செய்தேன். 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை என்னை முன்மொழியும்படி சொன்னார். அந்த பாவத்தையும் செய்தேன். ஈரோடு இடைத்தேர்தலில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் போட்டியில் இருந்து விலகினேன். ஆனால், இரட்டை இலை சின்னம் கிடைத்தும் எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களின் ஆதரவுடன் இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். தேர்தல் பணிகளை முழுமையாக செய்தால், 39 தொகுதியிலும் நமது அணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு பேசினார்.
The post ஜெயலலிதா எப்போ இறப்பார் என காத்திருந்த எடப்பாடி: ஓ.பன்னீர் செல்வம் காட்டம் appeared first on Dinakaran.