சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம். கடற்கரை – செங்கல்பட்டு. தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30. காலை 10.40. காலை 10.50. காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40, காலை 10.55. காலை 11.30. மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் – கடற்கரை இடையே இயக்கப்படும் ரயிலும், திருமால்பூர்- கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம்_ கடற்கரை ரயில்கள் ரத்து
* காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.25, 11.35.
* மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15.
* மாலை 4.30 வரை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55. மதியம் 12.45, மதியம் 1.25. மதியம் 1.45 மதியம் 2.20. மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30. காலை 9.40. காலை 10.55. காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.

The post சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: