ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 3 லட்சம் திருட்டு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப்.10: திருவண்ணாமலையில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் ₹3 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கம் தாலுக்கா அட்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு மனைவி சுமித்ரா(33). இவரது கணவர் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது, திருவண்ணாமலையில் அடுத்த நல்லவன் பாளையம் கிராமத்தில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீடு கட்டுவதற்காக சீட்டு கட்டி சேமித்து வைத்திருந்த ₹3 லட்சத்தை நேற்று எடுத்துக் கொண்டு திருவண்ணாமலையில் இருந்து அரட்டவாடி கிராமத்திற்கு பஸ்சில் சுமித்ரா பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தேனி மலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, சுமித்ரா வைத்திருந்த பையில் இருந்து பணம் திருட்டு போனது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 3 லட்சம் திருட்டு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Related Stories: