முள்வேலியில் மீட்கப்பட்ட குழந்தை தத்து மையத்தில் ஒப்படைப்பு

சேலம்,பிப்.10: சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி அருகேயுள்ள முள்வேலியில், கடந்த மாதம் 17ம்தேதி பச்சிளம் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி, இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள், குழந்தையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த குழந்தையை, தத்து மையத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மீட்கப்பட்ட குழந்தையை நேற்று தத்துமைய பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார். அப்போது, குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

The post முள்வேலியில் மீட்கப்பட்ட குழந்தை தத்து மையத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: