ஒன்றிய அரசை கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, பிப்,9: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தியும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ.,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் கொளஞ்சி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுப்பதுடன் அரசை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வரும் கவர்னர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

The post ஒன்றிய அரசை கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: