இத்திட்டத்தை வெற்றிபெறச்செய்ய போதிய அவகாசம் வணிகர்களுக்கு தேவை என்பதையே இது பிரதிபலிக்கிறது. வாட் சமாதான திட்டத்தில் விடுபட்ட வணிகர்களை சேர்த்திடவும், ஒரு ஆண்டு கால அவகாசம் அளிக்கவும் வலியுறுத்தி, வணிகவரித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மனு தரப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், பிப்.15ல் முடியும் இச்சமாதான திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும், வணிகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவரவும் வேண்டுகிறோம் என கூறியுள்ளோம்.
The post வணிகர்கள் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.