கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்

சென்னை: கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார். பெரியார் பல்கலை. சுற்றறிக்கைக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலை.யில் பணியாற்றுவோர் நூல்களை வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் தகவல்களை சுற்றறிக்கை கோருகிறது. நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என பல விவரங்களை சுற்றறிக்கை கோருகிறது என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

The post கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: