சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.