இந்தூரில் 6 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வந்த 6 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிமம் இன்றியும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தாவில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

The post இந்தூரில் 6 பட்டாசு ஆலைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: