நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், 2013ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியை தொடங்கிய எஸ்.வைத்தியநாதன் இதுவரை 67,000 வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளார் என்றார். ஏற்புரையாற்றிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த பாரம்பரிய கட்டிடத்தில் பணியாற்றுவது முடிவுக்கு வருவது வருத்தமாக உள்ளது. நேர்மையான வழக்கறிஞர்களே பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலன் சார்ந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றார்.
The post மோட்டார் வாகன வழக்கு, குடும்ப நல வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு நல்லதே செய்ய வேண்டும்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.