‘அதிமுக துணை பொதுச்செயலாளர்’ பதவி கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் போட்ட பிச்சை: புகழேந்தி பதிலடி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அணியின் செய்தி தொடர்பாளரான புகழேந்தி நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், தயவு செய்து வெயில் காலத்தில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சைதான். இதனை பொதுவெளியில் கேபி.முனுசாமி போன்றோர் அசிங்கமாக பேசி வருகின்றனர். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி தற்போது கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது என்றால் அது ஓபிஎஸ் போட்ட பிச்சை என்பதை அவர் மறந்து விடக்கூடாது. ஒன்றியத்தில் பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தால், தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையில் பாஜ கூட்டணி அமைய வேண்டும் என்பதே மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ‘அதிமுக துணை பொதுச்செயலாளர்’ பதவி கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் போட்ட பிச்சை: புகழேந்தி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: