இதேபோல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட எஸ்பி கிருஷ்ணகாந்த் தலைமையிலான போலீசார், பஞ்சலிங்கலா சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தினர். அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது சில பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பணத்தை தெலங்கானாவை சேர்ந்த ஜிலானி, சுமன் ஆகியோர் எடுத்து வந்தது தெரிய வந்தது. பைகளில் இருந்த பணத்தை கணக்கிட்டபோது ₹60 லட்சம் ரொக்கம் இருப்பது ெதரிந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது ெதரிந்தது. பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
The post ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் எடுத்து சென்ற 60 லட்சம் ரூபாய் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.