இது தொடர்பான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரகு கணேஷ், மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது, அப்போது ரகு கணேஷ் தரப்பில் தனக்கு உடல் நிலை சரியில்லை, சிகிச்சை தேவை படுகிறது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி ரகு கணேஷ்யின் உடல் நலம் குறித்த அறிக்கையை சிபிஐ அளிக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்ரவரி.8க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை பிப்.8க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.