இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சந்தேகப் பட்டியலில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராகினர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் தங்கள் வழக்கறிஞருடன் வந்து விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு ஆகியோர் நாளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நிதி பெற்ற விவகாரம்?: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. விசாரணை!! appeared first on Dinakaran.