சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அபர்ட்டி நிறுவன அதிகாரியுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு செய்ய அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர், ஸ்பெயினில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தனது பயணத்தின்போது ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார். சென்னை திரும்பும் முதலமைச்சர் காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
The post ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.