இயக்குனரிடம் கோரிக்கை மனு காரைக்காலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

 

காரைக்கால்,பிப்.7: காரைக்காலில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது. காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை எஸ்.எஸ்.பி மணீஷ் வெளியிட்டார்.

பின்னர் எஸ்.எஸ்.பி மணீஷ் தலைமையில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு குறித்தும்,விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை எஸ்.பி.நிதின் கவுகால் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியானது திருப்பட்டினம், போலகம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி மற்றும் பூவம் பகுதிகளுக்கு சென்று இறுதியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிந்தது. பேரணி ஏற்பாடுகளை போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதி, உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post இயக்குனரிடம் கோரிக்கை மனு காரைக்காலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி appeared first on Dinakaran.

Related Stories: