மூதாட்டியிடம் நகை பறிப்பு

 

கிருஷ்ணகிரி, பிப்.7: பர்கூர் அடுத்த நியூ விஐபி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(75). இவர் நேற்று முன்தினம், தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டூவீலரில் வந்த மர்மநபர், திடீரென கிருஷ்ணவேணி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், பர்கூர் எஸ்ஐ குட்டியப்பன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: