அரியலூர் கலெக்டர் வழங்கினார் அரியலூர் மாவட்ட அரசு காஜி நியமனம்

 

ஜெயங்கொண்டம், பிப்.6: அரியலூர் மாவட்டத்திற்கு அரசு காஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட அரசு காஜியாக உடையார்பாளையத்தை சார்ந்த மெளலானா அல்ஹாஜ் ஷேக் இப்ராஹிம் ஃபாஜில் அன்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபு கல்லூரியில் 2005 ஆண்டு பட்டம் பெற்றார்.

உடையார்பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் 20 ஆண்டுகளாக இமாமாக பணியாற்றி வருகிறார். மற்றும் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு உறுப்பினராகவும், பெரம்பலூர் அரியலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினராகவும். ஜெயங்கொண்டம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை துணை செயலாளராகவும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post அரியலூர் கலெக்டர் வழங்கினார் அரியலூர் மாவட்ட அரசு காஜி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: