ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா

போச்சம்பள்ளி, பிப்.6: தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினவிழாவையொட்டி, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாமரைசெல்வன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் நாகரசம்பட்டி ரவி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் துரை, துணை தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சகாதேவன், சண்முகம், மாரிமுத்து, புகழேந்தி, கிருஷ்ணமூர்தி, குப்புசாமி, குட்டி, முனிராஜ், பழனி, சக்திவேல், செல்வம், துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீர்த்தமலை நன்றி கூறினார்.

The post ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: