கின்னார் மாவட்டம் பங்கி நல்லா பகுதியில் சட்லஜ் ஆற்றின் அருகே கார் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வெற்றியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காரை ஓட்டிய டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் காசா பகுதியைச் சேர்ந்த டென்சின் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஆற்றில் மூழ்கிய வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நண்பர் கோபிநாத் சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவரிடமும் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வெற்றி துரைசாமியை ேதடும் பணியை இமாச்சல போலீசாரும், மீட்புப் படையினரும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
The post சுற்றுலா சென்ற போது விபத்து இமாச்சல் ஆற்றில் கார் விழுந்து சைதை துரைசாமி மகன் மாயம்: டிரைவர் பலி நண்பர் படுகாயம் appeared first on Dinakaran.