ஊற்று, நீரோடைகள் வறண்டு விட்டதால் கோதையாற்றிலும் தண்ணீர் குறைவாகவே செல்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமான அளவில் கொட்டுகிறது. குமரி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மக்கள் சராசரி நாட்களிலும் திற்பரப்பு அருவிக்கு படையெடுத்து வருகின்றனர். திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் உற்சாகமாக குளியல் போட்டதோடு, மேல்தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை ரசித்தனர்.
The post குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.