பொன்னமராவதி அருகே நெய்வேலியில் புதிய கலையரங்கம்

 

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே புதிய கலையரங்கம் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை திறந்துவைத்தார். பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எய்ட் இந்தியா சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.புதிய கலையரங்கத்தை திறந்து வைக்க வந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரை அப்துல்கலாம்,நேதாஜி,பைலட் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்த மாணவ மாணவிகள் வரவேற்றனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ சின்னத்துரை மரக்கன்றுகள் நட்டார்.நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன், எய்டு இந்தியா மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பிச்சம்மாள், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள் இலாகி ஜான், ராமதிலகம், அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்சின்னையா, தலைமை ஆசிரியர் ரூபி ப்ளோரா, இடைநிலை ஆசிரியர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே நெய்வேலியில் புதிய கலையரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: