எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே இந்த கூட்டத்தில் ஜனசேனாவுக்கு 25 முதல் 30 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ஜன சேனாவுக்கு இன்னும் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் பவன் கல்யாண் கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்துள்ளார்களாம். ஜனசேனா போட்டியிடும் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் இடங்களில் ஜனசேனா வேட்பாளர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் இல்லாமல் செயல்பட வேண்டும் என இருகட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்துள்ளார்களாம்.
The post குண்டூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் சந்திப்பு சந்திரபாபுவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்தார் பவன் கல்யாண் appeared first on Dinakaran.