குண்டூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் சந்திப்பு சந்திரபாபுவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்தார் பவன் கல்யாண்

திருமலை: குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள வீட்டில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை பவண் கல்யாண் சந்தித்து ெதாகுதி பங்கீட்டை இறுதி செய்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உண்டவல்லியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு நேற்று ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் சென்றார். பின்னர் இருவரும் மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு கட்சிகள் போட்டியிடுவது குறித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதித்தனர்.

எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே இந்த கூட்டத்தில் ஜனசேனாவுக்கு 25 முதல் 30 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ஜன சேனாவுக்கு இன்னும் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் பவன் கல்யாண் கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்துள்ளார்களாம். ஜனசேனா போட்டியிடும் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் இடங்களில் ஜனசேனா வேட்பாளர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் இல்லாமல் செயல்பட வேண்டும் என இருகட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்துள்ளார்களாம்.

 

The post குண்டூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் சந்திப்பு சந்திரபாபுவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்தார் பவன் கல்யாண் appeared first on Dinakaran.

Related Stories: