அப்போது அங்கிருந்த காவலர்கள் விபத்து குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் முதலில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் பேரம் பேசப்பட்டதையடுத்து, கடைசியாக உரிமையாளர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக காவலர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார். இதில் காவலர் ஜெய்கணேஷ் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. லஞ்சத்தை பெற்றுக் கொண்ட காவலர் ஜெய் கணேஷ், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கேட்கும் கேள்விக்கு எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக் காட்டி அசத்திய காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
The post விபத்து வழக்கை விசாரிக்க லஞ்சம் வாங்கிய காவலரின் வீடியோ வைரல் appeared first on Dinakaran.