வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை

 

ஈரோடு, பிப். 3 வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான இருசக்கர விழிப்புணர்வு பேரணி ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.

பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேரணி விளக்க உரையாற்றினார்.

விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து பேசுகையில்,“வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பேரணி நடத்தப்படுவது வரவேற்க தக்கதாகும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், மேயர் நாகரத்தினம், தமிழ்வளர்ச்சிதுறை இயக்குநர் ரெஜினாள்மேரி, தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை appeared first on Dinakaran.

Related Stories: