விலை உயர்வால் அனைத்து சாலை பணிகளும், அரசு கட்டிட பணிகளும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வீடு கட்டும் மக்கள் மத்தியில் இந்த விலை உயர்வால் அரசு மீது மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளனர். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சென்னையில் அனைத்து கட்டுமான சங்கத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதில் நல்ல முடிவை அரசு எடுக்கும் என நம்புகிறோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எல்லா வேலைகளையும் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ஜல்லி, எம்சாண்ட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.