செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைகிறது. கே.சி.பி.டி. மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இம்மாதத்துக்குள் முடிவடையும் என்று சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள்..!! appeared first on Dinakaran.