திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜன.30ம் தேதியை மத நல்லிணக்க உறுதிமொழி நாளாக அனுசரிக்கும் விதமாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் “மத நல்லிணக்க உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையில், இந்து மத சைவ வைணவ குருக்கள், அர்ச்சகர்கள், கிராம கோவில் பூசாரிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமிய இமாம்கள், உள்ளிட்டவர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

The post திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: