கேலோ இந்தியா கோகோ: மஹாராஷ்டிரா இரட்டை சாம்பியன்

மதுரை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடரின் கோகோ போட்டியில் மஹாராஷ்டிரா பெண்கள், ஆண்கள் பிரிவு அணிகள் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த கோகோ இறுதிப் போட்டியை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். பெண்கள் பிரிவு பைனலில் மஹாராஷ்டிரா – ஒடிஷா அணிகள் மோதின.

இப்போட்டியில் மஹாராஷ்டிரா 33-24 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. வென்றது. ஒடிஷா அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது. மூன்றாம் இடம் பிடித்த டில்லி, குஜராத் அணிகள் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றின. ஆண்கள் பிரிவு பைனலில் மஹாராஷ்டிரா – டெல்லி அணிகள் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட மகாராஷ்டிரா அணி 40-30 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

டெல்லி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. குஜராத், கர்நாடக அணிகள் வெண்கலம் வென்றன. பரிசளிப்பு விழாவில் மதுரை மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ராஜா, முருகன், ரமேஷ்கண்ணன், தினேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post கேலோ இந்தியா கோகோ: மஹாராஷ்டிரா இரட்டை சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: