வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேட்டபோது, அதிமுகவில் கூட்டணி குறித்து பேச 4 குழுக்களை அமைத்துள்ளோம். அவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, தனது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்திவரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவுடன் தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதனால் இபிஎஸ் கடும் அப்செட்டில் உள்ளதாகவும், இதனால் அவர் திருமலைக்கு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
The post கூட்டணி பேச யாரும் வராத நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் appeared first on Dinakaran.