குடியரசு தினத்தையொட்டி ரத்த தானம் செய்த இளைஞர்கள்

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை, ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் சார்பில் குடியரசு தின ரத்த தான முகாம் நடந்தது. ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு பாபு தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் மருத்துவர்கள் நிரஞ்சனி, அபிநயா மற்றும் செவிலியர்கள் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு அரசு டாக்டர் வெங்கடேஷ் சான்றிதழ் வழங்கினார். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,முத்துமுருகன், ராஜ்குமார், பூல்பாண்டி, ராஜமாணிக்கம், வழக்கறிஞர் ஜெய, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், பேராசிரியர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடியரசு தினத்தையொட்டி ரத்த தானம் செய்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Related Stories: