பத்மஸ்ரீ விருதுக்கான தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. அதனால்தான் மற்ற ஆண்டுகளை விட இந்த முறை பத்ம விருது பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்முறை 13 பெண் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் இலக்குகள் நிறைய உள்ளன. சிலர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்பித்து சிறந்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.
ஆனால் சிலர் இறந்த பிறகும் உடல் உறுப்பு தானம் மூலம் தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை செய்யும் அவர்களை பாராட்டுகிறோம். குடியரசு தின அணிவகுப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. பெண்களின் சக்தி அதிகம் பேசப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.
The post உடல் உறுப்பு தானம் பாராட்டுக்குரியது: வானொலியில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.