சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: சமூகநீதியை நிலைநாட்ட 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்….

The post சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: