தஞ்சாவூரில் 14 வயதுக்குட்டோருக்கு மாநில அளவில் ரோல் பால் போட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ரோல் பால் போட்டி நேற்று நடைபெற்றது. அதனை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் தொடங்கிய மாநில அளவிலான ரோல்பால் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று தஞ்சாவூர் அணியும் கோவை அணியும் மோதின. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தஞ் மாநகராட்சி மேயர் சன். இராமநாதன் கலந்து கொண்டு நேற்று முன்தினம் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 46 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

The post தஞ்சாவூரில் 14 வயதுக்குட்டோருக்கு மாநில அளவில் ரோல் பால் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: