நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாளே கடலில் மூழ்கி மணமகன் பரிதாப பலி மணமகள் தப்பினார்

தரங்கம்பாடி: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்கடிதெருவை சேர்ந்த குமார் மகள் நிவேதா (19). கும்பகோணம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த இவருக்கும், கும்பகோணம் வீரபத்திரகோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் நவீன்குமார் (23) என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமணம் நிச்சயதார்த்தம் கும்பகோணத்தில் நடந்து. இந்நிலையில் நேற்று கும்பகோணத்தில் இருந்து மணமக்கள் உள்பட உறவினர்கள் 25 பேர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அனைவரும் கடலில் குளிக்க சென்றனர். அப்போது மணமக்கள் நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயணபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன் (12) ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. அப்போது கடற்கரையில் இருந்த மீனவர்களும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் கடலில் இறங்கி 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நவீன்குமாரும், சரவணனும் உயிரிழந்தனர்.நிவேதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாளே கடலில் மூழ்கி மணமகன் பரிதாப பலி மணமகள் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: