இந்த பின்னணியில், நிதிஷ்குமார் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் அரசியலில் பரபரப்பான சூழலில் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டுள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அரசியல் நகர்வுகள் பேசுபொருளாகியுள்ள நிலையில் பாஜக செயற்குழு கூடுகிறது.
The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு.! appeared first on Dinakaran.