காளையார் கோவில் சிங்கம்புணரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி டூவீலர் பேரணி

காளையார்கோவில் / தேவகோட்டை / சிங்கம்புணரி, ஜன. 26: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன்படி காளையார்கோவிலில் தாசில்தார் அலுவலகம் சார்பாக. வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. அங்கு நடந்த உறுதிமொழி ஏற்பில் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ், ஆசிரியைகள் விமலா, ஜெயந்தி, சவேரியம்மாள், அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவகோட்டையில் ஆர்டிஓ பால்துரை தலைமையில், தாசில்தார் அசோக்குமார் முன்னிலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். சிங்கம்புணரியில் வருவாய்த்துறை சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் டூவீலர்களில் பேரணியாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தேர்தல் அலுவலர் சந்திரபோஸ், மண்டல துணை தாசில்தார் பழனிக்குமார்,வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post காளையார் கோவில் சிங்கம்புணரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி டூவீலர் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: