சுதந்திர தினவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

 

ஊட்டி, ஜன.26: குடியரசு தினவிழாவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி (இன்று) காலை மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதைைய ஏற்றுக் கொள்ளவுள்ளார். தொடர்ந்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், காவல்துறையினரை கவுரவித்தல், மாணவ, மாணவியர் மற்றும் பழங்கடியினர் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளது. எனவே, இவ்விழாவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post சுதந்திர தினவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: